புதுச்சேரி: பஞ்சவடி மத்திய திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. பச்சை திராட்சையில் அலங்காரம்..!
புதுச்சேரி: பஞ்சவடி மத்திய திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. பச்சை திராட்சையில் அலங்காரம்..!
புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள மத்திய திருப்பதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
புதுச்சேரி பஞ்சவடி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய திருப்பதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
வலம்புரி ஸ்ரீ மகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சாமி அமைந்துள்ள இந்த கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம் சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியையொட்டி முன்னதாக மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாராதனை மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சியும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மோகினி அலங்காரமும் நடைபெற்றது.
அத்துடன், ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் முழுவதும் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழத்தோட்டம் போன்ற அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறப்பு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் (சொர்க்கவாசல் வழியாக ) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதந்தார்.
தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஏழு நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
பொது மக்கள் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசித்தால் தோஷங்கள் நிவர்த்தியாகி, எதிர்காலத்தில் எந்த தோஷங்களும் வராமல் இருக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்பவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள். அன்று முதல் 7 நாட்கள் வரை பொதுமக்கள் சொர்க்கவாசல் வழியாக சீனிவாச பெருமாளை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..