நாகூர் தர்கா கந்தூரி விழா நிறைவு வண்ணமயமான வான வேடிக்கைகளுக்கு மத்தியில் கொடி இறக்கப்பட்டது
நாகூர் தர்கா கந்தூரி விழா நிறைவு வண்ணமயமான வான வேடிக்கைகளுக்கு மத்தியில் கொடி இறக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஹஜ்ரத் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின் 466ஆவது கந்தூரி விழா கடந்த டிச.24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ் விழாவில் ஜன.1ஆம் தேதி பீர் அமர வைத்தல், 2 ஆம் தேதி சந்தனகூடு ஊர்வலம், 3 ஆம் தேதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4 ஆம் தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் மேற்பார்வையில் நடைபெற்றன.
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா நிறைவடைந்ததை ஒட்டி, வண்ணமயமான வான வேடிக்கைகளுக்கு மத்தியில் கொடி இறக்கப்பட்டது
அவ் வகையில் 14 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான இன்று (ஜன.7), தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவிலும் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது.
வண்ணமயமான வான வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க கொடிகள் இறக்கப்பட்ட இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.