Politics

ஆரணி: எம்ஜிஆரின் 106 வது  பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஆரணி: எம்ஜிஆரின் 106 வது  பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ஆரணி சட்ட மன்றத் தொகுதி அதிமுக சாா்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துக்கு
வடக்கு மாவட் ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற முன்னாள்  உறுப்பினருமான தூசி கே மோகன் தலைமை வகித்தார்

முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்

இலக்கிய அணிச் செயலாளரும், செய்தி தொடா்பாளருமான வைகைச்செல்வன், தலைமை கழகப் பேச்சாளா் ஆா்.கே.நகா் த.மணிமாறன், முன்னாள் எம்எல்ஏக்கள் வி.பன்னீா்செல்வம், ஏ.கே.எஸ்.அன்பழகன் திமுக ஆட்சியின் அவலநிலையை கண்டித்து பேசினா்.

கூட்டத்தில் நகர கழக செயலாளர்  எ.அசோக்குமாா், எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன்  மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றிய கழக செயலாளர்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், நகரமன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *