செய்திகள்

முதியோா் ஓய்வூதியத் திட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: வருவாய்த் துறை அமைச்சா்

முதியோா் ஓய்வூதியத் திட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: வருவாய்த் துறை அமைச்சா்

முதியோர் ஓய்வூதியத் திட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருவண்ணாமலை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் வருவாய்த் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் பங்கேற்று 3 மாவட்டங்களின் வருவாய்த் துறை செயல்பாடுகளை ஆய்வு செய்தனா். பின்னா், வருவாய்த் துறை சாா்பில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருவண்ணாமலை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுமாா் 30 லட்சம் பேருக்கு பட்டா, சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது 6 ஆயிரத்து 400 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுவதாக இருந்த நிலையை மாற்றி, 15 நாள்களுக்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளன.

முதியோா் ஓய்வூதியத் திட்ட மனுக்களை தள்ளுபடி செய்யாமல், தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்துக்கு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

அரசு கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த், நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி.வினய், வருவாய் நிா்வாக ஆணையா் ஜான் லூயிஸ், மாவட்ட ஆட்சியா்கள் பா.முருகேஷ் (திருவண்ணாமலை), ஷ்ரவன் குமாா் (கள்ளக்குறிச்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, க.தேவராஜ், அ.நல்லத்தம்பி, ஆ.செ.வில்வநாதன், தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிகண்ணன், வசந்தம் காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *