FEATURED

வருமான வரி சோதனை நிறைவு: அச்சமின்றி செயல்படுவோம்–பிபிசி

வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் எப்போதும்போல், நேர்மையுடனும் அச்சமின்றியும் செயல்படுவோம் என்று பிபிசி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது அங்கு நடைபெற்ற கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.

அதனை பாஜக அரசு தடை செய்தது.

அதை தொடர்ந்து பிபிசியில் இந்த வருமானவரிஆய்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி  3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த வருமான வரி சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது.

இந்த மூன்று நாள் வருமான வரி ஆய்வின் முடிவில், பல்வேறு ஆவனங்களை வருமான வரி துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகங்களில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

அச்சமின்றி செயல்படுவோம்

இந்நிலையில், இதுகுறித்து பிபிசி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:–

வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.

நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் இந்த விவகாரங்கள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.

தற்போது நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம்.

இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பு. நாங்கள் எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கிறோம்.

அவர்கள் எப்போதும் அச்சம் அல்லது தயவு இல்லாமல் தொடர்ந்து நேர்மையுடன் செய்திகளை தயார் செய்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *