Politics

’கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது’ பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

’கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது’ பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

”மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்துகொள்வதற்கு எதிராக கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கை விரும்புகிறேன்”

கர்நாடகாவில் வென்றதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

கர்நாடகாவில் நடைபெற்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும்பன்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி அடுத்து வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர்,

கடந்த 2013 கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியைத் தழுவியது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன் நடைபெற்ற மூன்று பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றது என கூறி உள்ளார்.

“கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்துகொள்வதற்கு எதிராக கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர்,

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகள் குறித்த தனது கருத்தை உறுதிப்படுத்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

அதில் 2012-ல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. .

2013 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றபோதும், லோக்சபா தேர்தலில் பாஜகவிடம் பரிதாபமாக தோற்றதை அவர் நினைவுக்கூர்ந்ததுடன், “2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அதன் வெற்றியை காங்கிரஸ் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது, அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு 2019 லோக்சபா தேர்தலில் இந்த மாநிலங்களில் அதன் மோசமான செயல்திறன் இருந்தது” என்று கிஷோர் கூறி உள்ளார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *