FEATURED

காயிதே மில்லத் 128 வது பிறந்த தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!

காயிதே மில்லத் 128 வது பிறந்த தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!  

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  காயிதே மில்லத் அவர்களின் 128-வது  பிறந்தநாள் கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

இதை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு  நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை  கே.ஏ.வகாப் திருமண மண்டபத்தில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம்.பீர் முகமது தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஆதம் மௌலானா துவா ஓதி துவங்கி வைத்தார்.

மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ. அப்துல் வகாப், காதர் ஒலி, ஹபிபுல்லா, முன்னாள் நிர்வாகி அக்பர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் ஜே.மன்சூர் அலி வரவேற்பு உரையாற்றினார்.

இந் நிகழ்வில், அப்துல் காதர், இமாம் இஸ்மாயில்,உள்ளிட்ட  மாவட்ட, நகர நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

100  மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் அப்துல் வாகித் நன்றி உரையாற்றினார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *