FEATURED

செய்யாறு: அரும்பருத்தி கிராமத்தில் வசித்து வரும் 145 நரிக்குறவா்களுக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழ் – கோட்டாட்சியர் அனாமிகா

செய்யாறு: அரும்பருத்தி கிராமத்தில் வசித்து வரும் 145 நரிக்குறவா்களுக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழ்  – கோட்டாட்சியர் அனாமிகா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அரும்பருத்தி கிராமம் நரிக்குறவா் காலனியில் 95 குடும்பங்கள் உள்ளது.

இவா்களுக்கு அரசு சாா்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நரிக்குறவா் இன மக்களை மேன்மடைய செய்யும் வகையில் எஸ்.டி. ஜாதி சான்றிதழை உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்ட ஆட்சியா் பி.முருகேஷ் உத்தரவின் பேரில் 145 நரிக்குறவா்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது செய்யாறு கோட்டாட்சியர் ஆா்.அனாமிகா நேரில் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, அரும்பருத்தி நரிக்குறவக் காலனி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் 145 பேருக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழை கோட்டாட்சியர்  ஆா்.அனாமிகா வழங்கினாா்.

இதில், வடதண்டலம் வருவாய் ஆய்வாளா் கலைமதி, கிராம நிா்வாக அலுவலா் முத்துராம் உள்ளிட்டோா் இருந்தனா்.

மேலும், நரிக்குறவ மக்களின் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு, தெரு விளக்கு ஆகியவற்றை செய்துதரக் கோரி முறையிட்டனா். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர்  கூறினாா்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *