வானகரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் – அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
வானகரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் – அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடக்கும் வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிவிப்பில்,
“இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம்,
கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 06.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.30 மணிக்கு சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிவிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்