FEATURED

110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை!

110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை!

ராமேஸ்வரம்: இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை துறைமுகம் அந் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது சேதமடைந்தது.

இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.300 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. இந்தியாவின் நிதி உதவி மூலம் இத்துறைமுகமானது, வர்த்தக ரீதியிலான துறைமுகமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, 16.06.2023-ல் திறக்கப்பட்டது.

முன்னதாக, காங்கேசன் துறையிலிருந்து புதுச்சேரியிலுள்ள காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்த மாத இந்திய வருகையின்போது, காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *