கொங்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்! செப்.24 ல் காங்கேயத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!
கொங்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!செப்-24ல் காங்கேயத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 24 ஆம் தேதி காங்கேயத்தில் கொங்கு மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
கழகத் தலைவர் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்” நடத்திட முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் இராமநாதபுரத்தில் முறையே டெல்டா மற்றும் தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற 24-09-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது
முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 14 கழக மாவட்டங்களின், மாவட்ட கழகச் செயலாளர்கள்,தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) கூட்டத்தை’ கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளஉரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
1. திருப்பூர் வடக்கு
2. திருப்பூர் தெற்கு
3. சேலம் கிழக்கு
4. சேலம் மேற்கு
5. சேலம் மத்திய
6. ஈரோடு வடக்கு
7. ஈரோடு தெற்கு
8. கரூர்
9. கோவை மாநகர்
10. கோவை வடக்கு11.கோவை தெற்கு
12.நாமக்கல் கிழக்கு
13.நாமக்கல் மேற்கு
14.நீலகிரி