செய்யாறில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் ஒ.ஜோதி எம்எல்ஏ ஆய்வு!
செய்யாறில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் ஒ.ஜோதி எம்எல்ஏ ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி மாா்க்கெட் பகுதியில் ரூ.4.44 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி, ரூ.19.20 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டும் பணி, மாவட்ட ஊராட்சிக்குழு நிதி மூலம் அரசு கலைக்கல்லூரி அருகே ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப் பணிகளை திருவத்திபுரம் நகர மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் முன்னிலையில் செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, மாா்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோா், முதியோா்கள் காப்பகத்தில் ஒ.ஜோதி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தாா்.
மேலும், காப்பகத்தில் தங்கியுள்ளவா்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர அதிகாரிகளை வலியுறுத்தினாா்.
ஆய்வின் போது நகர மன்ற துணைத் தலைவா் பேபிராணி பாபு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.