LatestPolitics

“தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல” – அமைச்சர் எ.வ.வேலு

“தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல” – அமைச்சர் எ.வ.வேலு 

திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

“விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.

வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு ஆணி செய்கின்ற தொழிற்சாலை கூட இங்கு கிடையாது. திருவண்ணா மலை மாவட்டம் என்பது விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொழிற்சாலை வேண்டும் என்று பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் சிப்காட்டிற்காக 3 கட்டமாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.

முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது 13 தொழிற்சாலைகள் வந்தது. குறிப்பாக அயல் நாட்டு தொழிற்சா லைகளும் வந்தன.

இதில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி தொகுதியை சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.

2-ம் கட்டமாக 1820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியினால் 55 தொழிற்சாலைகள் அங்கு வருகின்றன.

இதனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவார்கள். இன்னும் அயல் நாட்டு தொழிற்சாலைகள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு முயன்று வருகின்றார்.

3-வது கட்டமாக 1200 ஏக்கர் நிலம் கையப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஒரு தொழிற்சாலை கட்டினால் சுமார் அங்கு 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட 9 கிராமங்களில் இது குறித்து அரசின் சார்பில் பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 1881 விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்படுகிறது. அதில் 239 விவசாயிகள் தான் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அரசாங்கம் விவசாயிகளை பொருளாதார ரீதியாக நன்றாக வைத்து கொள்ள தான் எண்ணுகின்றது.

அதே நேரத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கினால் தான் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றது. இதில் சிலர் பேர் மட்டும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை தூண்டும் விதமாக அரசாங்கம் எந்த வேலையும் செய்ய கூடாது என்று நினைக்கிறார்கள்.

அரசு விவசாயிகள் நிலங்களை அபகரிக்கின்றது என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கின்றனர். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாயிகள் நிலத்தை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல”

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளவர்க ளின் குடும்பத்தினர் உடனிருந்தனர்

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *